திருகோணமலை மூதூரில் இருந்து வெருகல் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்!

திருகோணமலை மூதூர் – தங்கபுரம் விநாயகர் ஆலயத்திலிருந்து வேல் தாங்கி குழுவினர், வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை – வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தை நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்தனர்.

குறித்த நடை பயணமானது இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்றுள்ளது.

இதன் போது குறித்த ஆலயத்தில் பஜனைகள், பூஜை வழிபாடுகள் செய்திருந்தனர்.

தென்கைலை ஆதின முதல்வர் இவ் பாத யாத்திரை குழுவினரை வழியனுப்பி வைத்துள்ளனர்.