பெண்ணின் தலை துண்டித்து நிர்வாணமாக வீசப்பட்ட உடல்!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள குஜைனி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தலையில்லாத பெண்ணின் உடல் நிர்வாண நிலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்தது பொலிஸார் பெண்ணின் உடலை மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பெண்ணை கற்பழித்து தலையை துண்டித்து கொன்றுவிட்டு நிர்வாண நிலையில் உடலை சாலையில் வீசி இருக்கலாம் என பொலிஸார் சந்தேக வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் நெடுஞ்சாலையின் மறுபுறத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், உடல் கிடந்த இடம் அருகே ஒரு பெண் நடந்து செல்வது பதிவாகி இருந்தது.

அவர் சாம்பல் நிற கால்சட்டை அணிந்திருந்தாக கூறப்படுவதுடன் பெண் உடல் அருகே சாம்பல் நிற ஆடையின் துண்டுகள் இருந்ததாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. ஆனால் சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள கேமராவில் பெண் ஒருவர் தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த பெண் குறித்து போலீசார் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரித்து வருவதுடன் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டு நிர்வாணமாக வீசப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து.