முடி கொத்துக் கொத்தாக கொட்டுதா இதை மட்டும் செய்யுங்க

இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் என வேறுபாடு இன்றி பலரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக முடி உதிர்வு இருந்து கொண்டேதான் இருக்கின்றது. நமது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதுடன் முடி பராமரிப்புக்கு என நேரத்தை செலவிட வேண்டும்.

முடி ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது என்பதை சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் வெங்காயம் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல பண்புகளை கொண்டுள்ளன. அதன் நன்மைகள் மற்றும் வெங்காய எண்ணெயை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

வெங்காயத்தில் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் அவை முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நமது உச்சந்தலையில் பிஹெச் அளவை பராமரிப்பதற்கு வெங்காயத்தில் உள்ள பண்புகள் உதவுகின்றன.

சிறந்த பளபளப்பான மற்றும் மென்மையான கூந்தலை பெறுவதற்கு இவை உதவுகின்றன. புது முடி வளர்ச்சியை ஊக்குவித்து முடி அடர்த்தியை தருவதற்கு உதவுகிறது.

தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறுவதற்கு நாம் கெமிக்கல் கலந்து கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இனி இல்லை. ஏனெனில் தற்போது இரசாயனங்கள் கலக்காத முறையில் நாமே இந்த வெங்காய எண்ணெயை தயாரித்து நமது கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.

இது இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. குளிப்பதற்கு ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பு இந்த எண்ணெயை கூந்தலில் தடவி சிறிது நேரம் அப்படியே ஊற விட வேண்டும். பின்னர் மிதமான அல்லது கெமிக்கல் அல்லாத ஷாம்புகளை பயன்படுத்தி தலையை கழுவி கொள்ளுங்கள்.

இது முடி வளர்ச்சியை மேம்படுத்தி கூந்தலுக்கு பளபளப்பையும் மென்மையையும் தருகிறது.

​வெங்காய எண்ணெய் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
சிறிய வெங்காயம் – 1 கப் (வெங்காயத்தை எடுத்து அதனை இரண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயமாக இருந்தால் மிகவும் நல்லது)

தேங்காயெண்ணெய் – 1 கப் வெங்காயத்திலிருந்து சாற்றை எடுக்க அதை நன்கு மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்

செய்முறை
ஒரு இரும்பு வாணலில் தேங்காய் எண்ணெயை சேர்த்து மிதமான வெப்பத்தில் சூடு படுத்தவும். இப்போது நீங்கள் அரைத்து வைத்திருக்கும் வெங்காய சாற்றை இந்த எண்ணெயில் கலந்து கொள்ளவும்.

மிதமான வெப்பத்தில் தொடர்ந்து நன்கு கிளறி விடவும். இந்த கலவை கொதிக்கும் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். இந்த நிலையில் தீயை நன்கு குறைத்து தொடர்ந்து கிளறவும்.

இப்போது ஆயில் பிரிந்து வர தொடங்கும். இந்த நிலையில் அடுப்பை அணைத்து இந்த கலவையை ஆற விடவும். பின்னர் எண்ணெய் வடிகட்டி காற்று புகாதவாறு ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து பயன்படுத்தலாம்.