போதைப்பொருள் பாவனைப் பெண்களுக்கு புனர்வாழ்வு- வவுனியாவில் முன்னெடுப்பு!

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்க வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நிலையத்தில் 100 பெண்கள் வரையில் புனர்வாழ்வளிக்கப்பட முடியும் என புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக போதைக்கு அடிமையான பெண்களுக்கு இந்த நிலையம் ஊடாக மறுவாழ்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.