தமிழர்கள் திரட்சியாக பாெது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்

தேசத்தின் இருப்புக்காக தமிழர்கள் திரட்சியாக பாெது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (16.09) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் சிறப்பு குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பாேதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறப்பு குழு கூட்டத்திலும் மத்திய குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவை நடைமுறைப்படுத்தப் பாேவதாக தெரிவித்தார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளேன்.

சிங்கள தேசிய வேட்பாளர் ஒருவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தமிழர்களது அரசியல் உரிமை தாெடர்பில் அவர்களது தன்னாட்சியை தருவதாக இல்லை. இதனால் நான் அதனை ஏற்றுக் காெள்ளவில்லை.

தமிழர்கள் திரட்சியாக தங்களின் தேசத்தின் இருப்பையும், தங்களது அடிப்படை அரசியல் உரிமைகளையும் நிலை நிறுத்துவதற்கும் பாெது வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என்பதை வெளிப்படையாக தெரிவித்துவிட்டு வந்துள்ளேன் எனத் தெரிவித்தார்.