இலங்கை பாகிஸ்தான் வர்த்தகத்தில் விரிசல் நிலை!

பாகிஸ்தானும் இலங்கையும் வர்த்தகத்துறையில், இருதரப்பு பிணக்குகளை தீர்க்கும் அமைப்பை இன்னும் செயல்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னரும் கூட இந்த பிணக்குகள் மற்றும் வர்த்தக மோதல்கள் தீர்க்கப்படாமல் உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இலங்கைக்கான பாகிஸ்தானின் ஏற்றுமதிக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய சஞ்சிகை ஒன்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வர்த்தக அமைச்சு
இலங்கை அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்பதன் காரணமாகவே இந்த நிலை தொடர்வதாக, பாகிஸ்தானின் வர்த்தக அமைச்சு, வர்த்தகத்திற்கான செனட் நிலைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

எனவே இந்த பிரச்சினை இப்போது அரசியல் மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் என்று, அந்நாட்டு வர்த்தக அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

இந்தநிலையில் “நாங்கள் இலங்கையுடன் நட்புறவு கொண்டுள்ளோம், வர்த்தக மோதல்களை சுமுகமாக தீர்க்க விரும்புகிறோம்” என்று பாகிஸ்தானின் வர்த்தக அமைச்சர் ஜாம் கமல் தெரிவித்துள்ளார்;

மேலும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இந்த வர்த்தக ஒப்பந்தம், 2013ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்டது.