வாக்காளர் அட்டை கிடைக்காதோர் தபால் நிலையத்தில் பெற்றுக்கொள்க!

இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், இன்று (18) முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.