யாழில் பதிவுத் திருமணம் இடம்பெற்ற சில மாதங்களில் யுவதிக்கு நிகழ்ந்த சோகம்!

யாழ்ப்பாணத்தில் பதிவுத்திருமணம் செய்து ஒன்பது மாதங்களில் இளம் பெண் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவத்தில் பண்டத்தரிப்பு காலையடி பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து வரும் இளைஞர் ஒருவரை ஒன்பது மாதங்களுக்கு முன்னர் யுவதி பதிவுத்திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் நுரையிரலில் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பெற்று வந்தார். எனினும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.