வீடொன்றில் பெண் கொலை!

மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெங்கிரிவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

பெங்கிரிவத்த – சன்தானம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் நீண்ட நாட்களாக சாரதியாக பணியாற்றிவந்த ஒருவரே இந்த கொலையை செய்ததாக தெரியவருகிறது.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.