வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் கைது!

சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடன் கொண்ட வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் திருகோணமலை சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து இரண்டு பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஒரு பொதி யின் எடை மூன்று கிலோ 325 கிராம் எனவும் மற்றைய பொதியின் எடை மூன்று கிலோ 495 கிராம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் சம்பூர் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.