பாடகி கெனிஷாவுடன் தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயம்ரவி!

நடிகர் ஜெயம் ரவி, பாடகி கெனிஷாவுடன் தன்னை சேர்த்து வதந்தி பரப்புவதற்கு ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார். இவர் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், ஜெயம் ரவி தனது மனைவியை பிரிவதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

ஆனால் இந்த முடிவில் தனக்கு விருப்பம் இல்லாதது போன்று மனைவி ஆர்த்தி பதிவு ஒன்றினை வெளியிட்டது ரசிகர்களுக்கு குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் நேரத்தை கழித்து வருவதை அவதானித்த நெட்டிசன்கள் இருவருக்கும் தொடர்பு உள்ளதாக வதந்தியை கிளப்பி வந்தனர். இதற்கு ஜெயம் ரவி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி
ஜெயம் ரவி நடித்துள்ள ப்ரதர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், இதில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஜெயம் ரவி கூறுகையில், “இந்த விஷயத்தில் ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். வாழு… வாழ விடு. யாரையும் இதில் இழுக்காதீர்கள். ஏதேதோ பெயர்களை சொல்கிறார்கள். அப்படி செய்யாதீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்க விடுங்கள்.

பாடகி கெனிஷா 600 மேடைகளில் பாடியவர். பல உயிர்களை காப்பாற்றிய ஒரு ஹீலர் அவர். எதிர்காலத்தில் நானும், கெனிஷாவும் சேர்ந்து ஹீலிங் சென்டர் தொடங்கி பலருக்கும் உதவ வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். அதைக் கெடுக்காதீர்கள். அதை யாராலும் கெடுக்கவும் முடியாது. தேவையில்லாமல் என்னையும், கெனிஷாவையும் தவறாக பேச வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.