அனுரவுடன் கூட்டணி அமைக்க பேச்சவார்த்தை!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சி முக்கியஸ்தர்களுடன் மலையகத்திலுள்ள பிரதான கட்சியின் பிரமுகர்கள் பேச்சு நடத்திவருகின்றனர்.

கொழும்பில் முகாமிட்டுள்ள மேற்படி கட்சி உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியினருடன் நேரடி பேச்சில் ஈடுபட்டு, அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய்ந்துவருகின்றனர் என தெரியவருகின்றது.