யாழில் சடத்துடன் கரையொதுங்கிய சடலம்!

கடற்றொழிலுக்கு நேற்றியதினம் (22) மாலை 5.30 மணியளவில் சென்றவர் படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் பேரானந்த சிதம்பரம் நாகராஜா (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றியதினம் அராலியில் இருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்றுள்ளார்.இவ்வாறு சென்றவர் இன்று (23) காலைவரை திரும்பி வரவில்லை. இந்நிலையில் தேடுதலில் ஈடுபட்ட ஊரவர்கள், அவரது சடலமானது பொன்னாலை கடலில் படகுடன் கரையொதுங்கி இருந்ததை அவதானித்தனர்.சடலத்தின் வாயில் காயம் ஒன்று காணப்படுகிறதாக தெரிவிக்கபப்டும் நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.