தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மோகன் ஜி கைது

மோகன் ஜி
தமிழ் சினிமாவில் திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கியவர் மோகன் ஜி.

இவர் கடைசியாக இயக்கிய பகாசூரன் படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை.

கைது

இந்நிலையில் மோகன் எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை பேசி வருபவர். அந்த வகையில் சமீபத்தில் பழனியில் கொடுக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக பேசியிருந்தார்.

இதற்காக இவர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.