மேல் மாகாண ஆளுநர் இராஜினாமா

மேல் மாகாண ஆளுநரான மார்ஷல் ஒஃப் த எயார் ரொஷான் குணதிலக்கவும் பதவி விலகியுள்ளார்.

அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக 7 மாகாண ஆளுநர்கள், தங்களது பதவியிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.