இயக்குனராகும் ஆசையில் அதர்வா

பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதர்வா. இவர் 80ஸ்- 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் ஆவார்.

பாணா காத்தாடி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் அப்படத்தை தொடர்ந்து பல படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அந்த வகையில், பரதேசி, தள்ளிப் போகாதே,100, பூமராங், இமைக்கா நொடிகள் போன்ற பல படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பெற்றார். இருப்பினும் அவரால் பெரிய ஸ்டார் என்கிற அந்தஸ்த்தை பெறும் அளவுக்கு பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

தற்போது, இவர் கைவசமாக டி என் ஏ, நிறங்கள் மூன்று, ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ் போன்ற படங்கள் உள்ளன.

இயக்குனராகும் அதர்வா
படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் ‘செம போதை ஆகாதே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து அதர்வாவுக்கு இயக்குனராகும் ஆசையும் உள்ளதாம்.

இந்நிலையில், தற்போது ஒரு படத்தை இயக்கும் முயற்ச்சியில் அதர்வா இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.