நீரழிவு நோய் அதிகமானால் உடலில் தோன்றும் அறிகுறிகள்

உலக மக்களை பாடாய் படுத்தி வரும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் மிக முக்கியமானது. இது தொற்று நோய் இல்லாவிட்டாலும் இதனால் பாதிக்கப்படும் மக்கள் அதிகம்.

இதற்கு இவர்களின் உணவுமுறையும் ஒரு காரணமாக உள்ளது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு கணையத்தால் வெளியிடப்படும் ‘இன்சுலின்’ என்ற ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளில், கணையத்தால் சுரக்கும் இன்சுலின் போதுமான அளவில் இல்லை, அல்லது உடல் செல்கள் இன்சுலினை எதிர்க்கும். இதன் விளைவாக இரத்த குளுக்கோஸ் அளவுகள் அதிகரிக்கின்றன.

நீரிழிவு நோயில் பல வகைகள் உள்ளன.இந்த நோயை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை கொடுப்பது மிகவும் முக்கியமாகும்.ஆனால் ஆரம்பத்தில் இதன் அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இது அதிகமான நோயை எப்படி அறிகுறி வைத்து கண்டுபிடிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

நீரழிவு நோய்
பொதுவாக, நீரிழிவு நோயின் ஆரம்ப நிலைகளில் குறிப்பிட்ட அறிகுறிகள் எதுவும் காணப்படுவதில்லை. எனினும், இது நாள்பட அதிகரிக்கும்போது, ​​உடலின் சில பாகங்களில் அறிகுறிகள் தோன்றத் தொடங்கும்.

உடலில் ஐந்து முக்கிய உறுப்புகளில் காணப்படும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். நீரிழிவு நோய் கண்களின் (Eyes)லென்ஸ் மற்றும் விழித்திரையை பாதித்து, பார்வையை மங்கலாகச் செய்யும்.

இரத்த சர்க்கரை அளவு அதிகமானால், கண்களில் அடிக்கடி எரியும் உணர்வு ஏற்படும். மங்கலான பார்வை, கண் எரிச்சல், கண்களின் நீர் என இவை அனைத்தும் நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும்.

கை கால்களில் கூச்சம்
எப்போதும் இல்லாமல் திடீர்ரென்று கால் மற்றும் கைகளில் கூச்ச உணர்வு ஏற்பட்டால் அது நீரழிவு நோயின் அறிகுறியாக கூறப்படுகின்றது. இது தவிர கால் மற்றும் கைகளில் உணவில்லாமல் அடிக்கடி இருந்தால் அதுவும் இந்த நோயின் ஒரு அறிகுறிதான்.

இந்த நோய் காரணமாக ரத்த ஓட்டத்தில் பிரச்சனை ஏற்படுவதால் அது உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். தோலில் ஏதாவது காயம் ஏற்பட்டால் அது ஆறாமல் அப்படியே இருக்கும்.

சிறுநீர் பிரச்சனை
சிறுநீரில் நுரை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழித்தல் போன்றவை சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாக இருக்கக்கூடும்.

நடக்க முடியாமல் பாதங்கள் மற்றும் கணுக்கால் வீக்கம் ஆகியவையும் சிறுநீரக பிரச்சனையின் அறிகுறிகளாக இருக்கலாம். நீரிழிவு நோய் காரணமாக அதிக வேலை செய்தாலோ, வேலையே செய்யாமல் இருந்தாலோ உடலில் சோர்வு மற்றும் பலவீனமான உணர்வு ஏற்படும்.

ஈறுகளில் ரத்த கசிவு
நீரிழிவு ஈறு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படலாம். பல் வலி மற்றும் தளர்வான பற்கள் நீரிழிவு நோயின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றன.