யாழில் குடும்ப பெண்ணை காணாது தவிக்கும் உறவுகள்!

யாழில் குடும்பப் பெண்ணொருவர் காணாமல் போனதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் நேற்று (01.10.2024) காலை 10 மணியில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகபாரம் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த அழகராசா லக்சுமி (வயது 50) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கம்
எனவே, இவர் தொடர்பான விடயங்களை தெரிந்தவர்கள், கீழ் காணும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

கணவன் – 0779855412

மகன் – 0767061231