சரிகமபவில் நான்காம் Finalist தெரிவு செய்யப்பட்டவர்

சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம்கிராமத்து மன்வாசனை சுற்று ஆரம்பிக்கப்பட உள்ளது, இதில் நான்காம் Finalist தெரிவு செய்யப்பட உள்ளார்.

சரிகமப
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமைசாலிகளாக இருக்கின்றனர்.

இசை தெரிந்த பலரடன் இசை தெரியாத பலர் இந்த போட்டியில் தங்ஙகளின் சிறப்பான பாடலை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் AR ரகுமான் சுற்று நடைபெற்றது.

இதில் மூன்றாம் Finalist ஆக சரத் சார்ஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து இந்த வாரம் கிராமத்து மண்வாசனை சுற்று ஆரம்பமாக உள்ளது. இதில் நான்காம் Finalist தெரிவு செய்யப்பட உள்ளார்.

இதில் மிகவும் அருமையாக பாடிய இருவர் தெரிவு செய்யப்படுகின்றனர். அதாவது கோல்டன் பெர்போமன்ஸ் வாங்கியவர்களிலும் திறமையாக பாடிய சரண் மற்றும் அமன் தெரிவு செய்யப்பட்டு அதில் இருந்து நான்காம் Finalist தெரிவு செய்யப்படுகின்றார். இந்த இருவரில் அமனா? அல்லது சரணா? தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை இந்த வாரம் எதிர்பார்க்கலாம்.