சிவகங்கை மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் ரூ.25 லட்சம் மோசடி

சிவகங்கை மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த கணக்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மறை மாவட்ட ஆயர் இல்லம் மேலூர் சாலை பிரிட்டோ நகரில் அமைந்துள்ளது. இங்கு 2019-ஆம் ஆண்டு முதல் ஆயர் இல்ல கணக்கர் பணியை மானாமதுரை பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் செய்து வந்துள்ளார்.