கொழும்பு – லண்டன் இடையேயான விமானப் பாதையில் மாற்றம்!

கொழும்பு – லண்டன் இடையிலான விமானப் பாதையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மாற்றம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதையடுத்து ஈரான் வான்பரப்பை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பிலிருந்து லண்டனுக்கான விமானங்கள் எகிப்து வான்வெளி ஊடாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விமானத்தின் பயண நேரம் 30 நிமிடங்கள் அதிகரிக்கும் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி எரிபொருள் பாவனையும் அதிகரிக்கும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.