நவராத்திரியின் போது அகண்ட தீபம் ஏற்றுவதற்கு என்ன காரணம் தெரியுமா ?

அகண்ட தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும், அகண்ட தீபம் ஏற்றி வழிபடுவதற்கான விதிமுறைகள் என்ன, அகண்ட தீபம் ஏற்றி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும், அகண்ட தீபத்தின் சிறப்புகள் என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த அகண்ட தீபம் பற்றி இதுவரை தெரியாதவர்களும் கூட இனி இந்த முறையில் தீபம் ஏற்றி நவராத்திரி வழிபாட்டினை செய்து அம்பிகையின் அருளை பெறலாம்.

நவராத்திரி என்றாலே அடுத்ததாக அனைவருக்கும் நினைவிற்கு வருவது பல வண்ணங்களில் மண் பொம்மைகளை அடுக்கி கொலு வைப்பது தான். ஆனால் கொலு அனைவரின் வீடுகளிலும் வைப்பது கிடையாது. கொலு வைக்க முடியாதவர்கள், கொலு வைக்கும் வழக்கம் இல்லாதவர்கள், அதே சமயம் நவராத்திரி வழிபாட்டினை மேற்கொள்ள நினைப்பவர்கள் வீட்டில் கலசம் வைத்தும், அகண்ட தீபம் ஏற்றியும், அவற்றில் அம்பிகையை ஆவாஹனம் செய்து வழிபடுவார்கள். கும்பத்தில் தெய்வ சக்தியை ஆவாஹனம் செய்வது யாகங்கள், ஹோமங்கள் நடைபெறும் போது செய்வது தான். ஆனால் அகண்ட தீபம் எதற்காக ஏற்றுகிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது.