தளபதி 69 படத்திற்காக தன் கொள்கையை தகர்ந்த விஜய்..

விஜய் தற்போது தன் கடைசி திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் விஜய்யின் கடைசி திரைப்படத்தை பற்றிய பேச்சு தான் கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வந்தது. GOAT படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே விஜய் தன் அரசியல் கட்சியை அறிவித்து நடிப்பில் இருந்து விலக இருப்பதாக தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

என்னதான் விஜய் அரசியலுக்கு வந்தாலும் அவர் தொடர்ந்து படங்களில் நடிக்கவேண்டும் என்றுதான் ரசிகர்களும் திரைபிரபலங்களும் கூறி வந்தார்கள். ஆனால் விஜய் அவர் எடுத்த முடிவில் உறுதியாகவே உள்ளார். இந்நிலையில் கடந்த பல மாதங்களாக விஜய்யின் கடைசி திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் ஓரிரு மாதங்களுக்கு முன்பு தான் எச்.வினோத் என்று உறுதியானது.

இதனை அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறிய நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் இதனை அதிகாரபூர்வமாகவே அறிவித்துள்ளது. தெலுங்கில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN விஜய்யின் கடைசி திரைப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. எச்.வினோத் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் அனிமல் புகழ் பாபி தியோல் வில்லனாக நடிக்கின்றார்.

மேலும் பூஜா ஹெக்டே இப்படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் என பலர் இப்படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வந்தது. இந்நிலையில் இப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் நேற்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. முதன் முதலில் இப்படத்திலிருந்து பாடல் காட்சி தான் படமாக்கப்பட்டு வருகின்றதாம்.

விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடும் பாடல் காட்சியை சேகர் மாஸ்டர் தான் படமாக்கி வருவதாக தகவல்கள் வருகின்றன. இதையடுத்து இப்படத்திற்காக விஜய் தன் கொள்கையை தளர்த்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதாவது விஜய் வழக்கமான ஞாயிற்றுக்கிழமைகளில் விடுப்பு எடுப்பாராம். அதைப்போல மாலை ஆறு மணிக்கு மேல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டாராம்.

இதனை ஆரம்பம் முதல் பின்பற்றி வருகின்றார் விஜய். ஆனால் தற்போது தளபதி 69 படத்திற்காக இந்த கொள்கையை தளர்த்துள்ளார். மாதம் 20 நாட்கள் தொடர்ந்து தளபதி 69 படத்தில் நடிப்பதாகவும், மீதமுள்ள நாட்களில் கட்சி பணியை கவனிக்க இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு மே மாதம் வரை நடைபெற இருப்பதாகவும், அதனைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் இப்படம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. அநேகமாக இப்படம் அடுத்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.