மாலையும், கழுத்துமாக ஜெயம் ரவி, ப்ரியங்கா மோகன் இதுதான் காரணமாம்!

ஜெயம் ரவியும், ஆர்த்தியும் பிரிந்துவிட்டது அனைவருக்கும் தெரியும். ஆர்த்தியை பிரிந்த பிறகு மும்பையில் செட்டில் ஆகியிருக்கிறார் ஜெயம் ரவி. ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என அவர் தெரிவித்துவிட்டார்.

கெரியரை பொறுத்தவரை எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, ப்ரியங்கா மோகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் பிரதர் படம் இந்த மாத இறுதியில் ரிலீஸாகவிருக்கிறது. பிரதர் படத்தை இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்து வருகிறார் ஜெயம் ரவி.

இந்நிலையில் ரவியும், ப்ரியங்கா மோகனும் மாலை அணிந்தபடி ஜோடியாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

அதை பார்த்த ரசிகர்களோ, ஜெயம் ரவிக்கும், ப்ரியங்கா மோகனுக்கும் திருமணமாகிவிட்டது என நினைத்து வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலரோ திருமண நாள் வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

அவசரப்பட்டு வாழ்த்த வேண்டாம். ஜெயம் ரவிக்கும், ப்ரியங்கா மோகனுக்கும் திருமணம் எல்லாம் நடக்கவில்லை. அது பிரதர் படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம்.

வனிதா விஜயகுமாருக்கும், ராபர்ட் மாஸ்டருக்கும் அக்டோபர் 5ம் தேதி திருமணம் என்கிற ஸ்டில் வெளியாகி வைரலானது. அதை பார்த்தவர்களோ, வனிதா அக்காவுக்கு நான்காவது திருமணமா, வாழ்த்துக்கள் என்றார்கள். ஆனால் அது மிஸ்டர் அன்ட் மிஸஸ் படத்திற்கு விளம்பரம் தேட வெளியிடப்பட்ட புகைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இருந்தாலும் திருமண புகைப்படம் குறித்து வனிதா எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பிரதர பட புகைப்படத்தை பார்த்துவிட்டு ஜெயம் ரவிக்கு மீண்டும் திருமணமாகிவிட்டது என பேசத் துவங்கிவிட்டார்கள்.

ஜெயம் ரவி தன் விவாகரத்தை அறிவித்ததில் இருந்து சமூக வலைதளங்களில் அது பற்றியே பேச்சாக உள்ளது. வீட்டில் வேலை செய்யும் ஆட்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை கூட தனக்கு இல்லை என்றார் ரவி. மேலும் ஆர்த்தி மட்டும் 3, 4 வங்கி கணக்கு வைத்து செலவு செய்கிறார். ஆனால் எனக்கென்று ஒரு வங்கி கணக்கு கூட இல்லை.