இன்றைய ராசிபலன்கள் 08.10.2024

மேஷ ராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் சந்தர்ப்பம் ஏற்படும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில், சக வியாபாரிகளால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரிஷப ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள் ளதாக இருக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியுடன் முடித்து விடுவீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிற்பகலுக்கு மேல் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடையே உங்கள் கௌரவம் உயரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சி உண்டாகும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

தெய்வ அனுகூலம் நிறைந்த நாள். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு உறவினர்கள் வகையில் எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலர் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

சிம்ம ராசி அன்பர்களே

நட்சத்திர மண்டலத்தில் மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் வரையிலான நட்சத்திரங்கள் சிம்மராசியைச் சேர்ந்தவை. சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் தலைமைப்பண்பு கொண்டவர்கள். தன்னை நம்பியவர்களைக் கைதூக்கிவிடவும் எதிர்த்தவர்களை வாழ்நாள் முழுவதும் புறந்தள்ளவும் செய்பவர்கள். அப்படிப்பட்ட சிம்மராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களைக் கொடுக்கும் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை 9 -ம் இடத்தில் அமர்ந்து பதவி, கௌரவம், பாராட்டு, பணவரவு ஆகியவற்றைத் தந்துவந்த குருபகவான் தற்போது 10 – ம் இடத்துக்குச் சென்று அமர்கிறார். பத்தில் குருவந்தால் பதவியைப் பரிப்பாறே என்கிற கவலையை விடுங்கள்.

வெற்றி வாய்ப்புக தேடி வரும். என்றாலும் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயங்களையும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

துலா ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியுடன் செலவும் ஏற்படும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக அமையும். உறவினர்கள் வகையில் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். ஆனால், புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பயணத்தின்போது கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதால், கையிருப்பு கரைவதுடன் கடனும் வாங்க நேரிடும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதன் காரணமாக மனதில் சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் சஞ்சலம் ஏற்படக்கூடும்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

மகர ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் தேவை. வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகமாக இருக்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.

கும்பராசி அன்பர்களே!

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பின்னர் முடிந்துவிடும். தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

மீனராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வெளியிடங்களில் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வெளியூரிலிருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.