வானிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் பல பகுதிகளில் பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, மேல், தெற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக வாய்ப்பு காணப்படுவதாக விளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழையின் போது குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

இவ்வாறான நிலையில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.