ரத்தன் டாடா மறைவுக்கு சுந்தர் பிச்சை இரங்கல்

இந்தியாவின் பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா மறைவுக்கு கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுந்தர் பிச்சை தனது இரங்கல் செய்தியில்,

“கூகுளில் ரத்தன் டாடாவுடனான எனது கடைசி சந்திப்பில், வேமோவின் முன்னேற்றம் குறித்துப் பேசினோம், அவருடைய பார்வை என்னைத் தூண்டியது.

அவர் ஒரு அசாதாரண வணிகம் மற்றும் மரபை விட்டுச் செல்கிறார். இந்தியாவில் நவீன வணிகத் தலைமையை வழி நடத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் கருவியாக இருந்தார். இந்தியாவை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

அவரது அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” எனத் சுந்தர் பிச்சை இரங்கல் தெரிவித்துள்ளார்.