காணி துப்பரவு செய்த இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கிளிநொச்சில், பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வெடி பொருள் தவறுதலாக வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (13-10-2024) அரசாங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் தமக்குச் சொந்தமான வயல் காணியில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது மண்ணுள் புதையுண்டு இருந்த நிலையில் இருந்த வெடி பொருள் தவறுதலாக வெடித்துள்ளது.
சம்பவத்தில் அரசங்கேணி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.