பிக்பாஸ் வீட்டில் எல்லை மீறி செல்லும் ஆண் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்களின் அராஜகம் அதிகரித்துக் கொண்டே செல்வதால், பெண் போட்டியாளர்கள் கலங்கி நிற்கின்றனர்.

பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை கமல் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியினை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றார்.

கடந்த வாரத்தில் ரவீந்தர் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் தீபக், ஜாக்குலின், அர்னவ், ரஞ்சித், விஷால், ஜெஃப்ரி, முத்துக்குமரன், சாச்சனா, தர்ஷா குப்தா, சவுந்தர்யா என 10 பேர் இந்த வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வார தலைவராக சத்யா வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று பிக்பாஸில் ஆண்களுக்கு சரியான ஆப்பு கிடைத்துள்ளது. சம்பாதித்த பணத்தை விட அதிகமாக செலவு செய்ததால், பிக் பாஸிடமிருந்து வர வேண்டிய பொருட்கள் வராமல், கொடுக்கும் பொருட்களை வைத்து தான் இந்த வாரத்தினை சமாளிக்க வேண்டும் என்று பிக் பாஸ் கூறியுள்ளார்.

இரண்டாவது ப்ரொமோ காட்சியில் பெண்களை சமைப்பதற்கு பிரித்து வைத்துள்ளார். இதனால் கடும் கோபத்தில் இருப்பதுடன், சாச்சனாவை அழவே வைத்துவிட்டார்கள்.