ரஜினி பற்றிய செய்தி உண்மை இல்லை..

வேட்டையன் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆன நிலையில் நடிகர் ரஜினி அடுத்து கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் அந்த படத்தை இயக்கி வருகிறார்.

அடுத்து ரஜினி இயக்குனர் மணிரத்னம் உடன் கூட்டணி சேர இருக்கிறார் என சமீபத்தில் தகவல் பரவியது. தளபதி படம் வெளியாகி 33 வருடங்கள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ரஜினி – மணிரத்னம் இணைவதாக வெளியான செய்தி உண்மை இல்லை என நடிகை சுஹாசினி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

“இந்த விஷயம் ரஜினி, மணிரத்னம் அகியோருக்கே தெரியாது. ஆனால் இப்படி எழுதுகிறார்கள்” என சுஹாசினி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.