இத்தாலி வாகன விபத்தில் இலங்கை இளைஞன் பலி!

இத்தாலியில் (Italy) இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இலங்கை (Sri Lanka) இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த அகில பெர்னாண்டோ (Akila Fernando) என்ற இளைஞனே இவ்வாறு விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

பல ஆண்டுகளாக இத்தாலியில் பணிபுரிந்து வந்த இந்த இளைஞன், சமீபத்தில் தனது திருமண நிகழ்விற்காக நாடு திரும்பி மீண்டும் இத்தாலிக்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில், வெளிநாட்டு பிரஜை ஒருவர் செலுத்திய காரில் குறித்த இளைஞர் மோதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.