வறுத்த பூண்டு கொலஸ்ட்ராலுக்கு முட்டுக்கட்டை போடுமா?

பூண்டு அதன் வலுவான சுவை மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்பட்ட பல்துறை மூலப்பொருள் ஆகும். இது பொதுவாக உணவுகளை மேம்படுத்த சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

பூண்டில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. இதன் நறுமணத்துக்கு அலிசின் என்ற உட்பொருள் காரணமாகும். இதுதான் பூண்டை உங்களுக்கு ஏற்ற உணவாக மாற்றுகிறது.

இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகள் போன்ற அதன் சாத்தியமான ஆரோக்கிய பண்புகளை எதிர்க்கவும் பயன்படுத்தப்படுகின்றது. அந்த வகையில் தினமும் 3 பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு என்னென் நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பூண்டு நன்மைகள்
பூண்டு பொதவாக உணவிற்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். இதை அப்படியே சாப்பிடுவார்கள் சிலர் வறுத்து சாப்பிடுவார்கள். இதை பச்சையாக சாப்பிடுவது இவற்றை காட்டிலும் நன்றாக உடலில் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டு வரும்.

வறுத்த பூண்டு சாப்பிட்டு வந்தால் அது உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. இது உடலில் தமனிகளை சுத்தமாக வைத்திருக்கும். இதில் இரத்தம் உறைவதை தடுக்கும். வறுத்த பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றைக் கொடக்கிறது.

பிற பொருட்களில் இருந்து வரக்கூடிய தொற்றை இது இல்லாமல் செய்யும். இந்த வறுத்த பூண்டு வைரஸ் மற்றும் பாக்டீரியா உள்ளிட்ட தொற்றுகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

நீங்கள் சோர்வாக உணரும்போது மற்றும் உங்கள் ஆற்றல் அளவு குறைவாக இருக்கும்போது, ​​வறுத்த பூண்டை சாப்பிடுவதன் மூலம் நல்ல மாற்றத்தைப் பெறலாம்.

இதை காலையில் வெறுவயிற்றில் சாப்பிடுவது மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கும். வறுத்த பூண்டு சாப்பிடுவது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறது. இது தவிர இது ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

இரவில் பூண்டு சாப்பிடுவதால் பல நன்மைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பூண்டில் ஆன்டிவைரல் பண்புகள் நிறைந்துள்ளதால் இது நோயெதிர்ப்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்கிறது. இதனால் அனைத்து வகையான நோய்களையும் இது தடுக்கப்படுகின்றன.

பூண்டு இதயத்தை நன்றாகச் செயல்பட வைக்கிறது. இதன் விளைவாக, பக்கவாதம், மாரடைப்பு போன்ற பல்வேறு இதய நோய்களின் அபாயங்கள் குறைகின்றன. பல ஆய்வுகளின் படி பூண்டானது அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கம், தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி போன்ற கீல்வாதத்துடன் தொடர்புடைய அறிகுறிகளை எளிதாக்கும் என்று அறியப்பட்டுள்ளது.