பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

மாகாணத்தில் பலத்த மழை, கடும் காற்று மண் சரிவு போன்ற எதுக்களினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் வாங்கூவார் தீவுப் பகுதியில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

ட்ரக் சாரதி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக பதிவான மரணங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.