குரு சந்திரன் சேர்க்கை- லட்சுமி யோகம் அதிஷ்ட கதவு திறக்கபோகும் ராசிகள்!

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. சுக்கிரன் பெயர்ச்சி மாதத்திற்கு ஒருமுறை முறை இடம்பெறும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், முக்கிய கிரகங்களான குரு, சந்திரன் இரண்டு ஒரே நேர்கோட்டில் சந்திக்கவுள்ளது. இன்றைய தினம் நடக்கவிருக்கும் இந்த சங்கமத்தினால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு லட்சுமி யோகம் கிடைக்கும்.

லட்சுமி யோகத்தால் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகும் ராசிகள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசி
வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள்.
எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.
உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும்.
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
ஏதாவது பிரச்சினை ஏற்படின் விநாயகரை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம் ராசி
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
ஆஞ்சநேயரை வழிபாட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தரும்.

மிதுனம் ராசி
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
வெளியில் செல்லும் போது தேவையான முன்னெச்சரிக்கையாக இருப்பது சிறந்ததுஇ
நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.
பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாளாக பார்க்கப்படுகின்றது.

கடகம் ராசி
வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.
வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
வியாபாரத்தில் சக வியாபாரிகள் போட்டியாக வரலாம்.
விநாயகரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி அனுகூலமாக முடியும்.

சிம்மம் ராசி

உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
துர்கை வழிபாடு நல்லது.

கன்னி ராசி
சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.
இன்று மகாலட்சுமியை வழிபாட்டால் நலம் சேர்க்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வராது என்று நினைத்த கடன் தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டாகும்.

துலாம் ராசி
வியாபாரத்தில் அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். ம்.
கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.
வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
இன்றைய தினம் முருகப்பெருமானை வழிப்பட்டால் நல்லது நடக்கும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

விருச்சிகம் ராசி
புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
லட்சுமி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.
வியாபாரத்தில் விற்பனை எப்போதும் போல் இருக்கும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.

தனுசு ராசி
உற்சாகமான நாளாக பார்க்கப்படுகின்றது.
வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
உங்கள் தலையீடு இல்லாமல் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
சிவபெருமான் வழிபாடு செய்வதால் தடைகளும் நீங்கும்.

மகரம் ராசி
பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள்.
வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.
இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நடக்கும்.
ஷண்முகக் கடவுளை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும்.

கும்பம் ராசி
பிள்ளைகளால் வீட்டில் உற்சாகமும் கலகலப்புமான சூழ்நிலை காணப்படும்.
தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வது நல்லது.

மீனம் ராசி
புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
சகோதரர் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.
வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
வேங்கடேச பெருமாளை வழிபட தடைகள் நீங்கும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.