காசாவில் உள்ள பாடசாலை மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.

காசாமுனையின் மத்திய பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த பாடசாலையில் போரால் வீடுகளை இழந்த மக்கள் முகாமிட்டு தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நுசய்ரத் என்ற பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாதுகாப்பு முகாம் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் 32 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் இஸ்ரேல் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.