இரத்தினபுரியில் துப்பாக்கிச்சூடு!

இரத்தினபுரி, மாரபன, தலாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (26) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இந்த வீட்டினுள் ஒரு பிள்ளை மற்றும் பெற்றோர் உட்பட ஐந்து பேர் இருந்துள்ள நிலையில் அவர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீட்டின் உரிமையாளர் சுரங்கத் தொழிலாளர் ஒருவர் எனவும் சுரங்கத் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.