இலங்கையில் ஹேக் செய்யப்படும் வாட்ஸ்அப் கணக்கள்

இலங்கையில் வாட்ஸ்அப் கணக்கள் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இணையக் குற்றவாளிகள் பொதுமக்களின் கணக்குகளுக்கான அணுகலைப் பெறுவதற்கு சரிபார்ப்புக் குறியீட்டினை (OTP) பயன்படுத்துகின்றனர்.

திடீரென வாட்ஸ்அப் சரிபார்ப்புக் குறியீடுகளைப் பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளதுடன், மோசடி செய்பவர்கள் பயனர்களைத் தொடர்புகொண்டு, நண்பர்களாகவோ அல்லது அறிமுகமானவர்களாகவோ காட்டிக்கொண்டு, சரிபார்ப்புக் குறியீட்டைக் கோருவதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு ஒருமுறை சரிபார்ப்புக் குறியீட்டினை வழங்கியவுடன் குறித்த கணக்குள் மோசடியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுகின்றன.

இதேவேளை, வாட்ஸ்அப் கணகை ஹேக் செய்தவுடன் அதில் உள்ள தொடர்பு இலக்கங்களுக்கு அவசர உதவியாக சிறு தொகை பணத்தை கேட்டு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாகவும், அந்த பணத்தை பெற பயன்படுத்தப்படும் வங்கி கணக்கு இலக்கமும் ஏனையவர்களிடம் இருந்து மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டவை என தெரிவிக்கப்படுகின்றது.