கடும் சுகவீனமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவைக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இன்று காலை வைத்தியசாலை சென்று பார்த்தார்.
சிகிச்சை தொடர்பில் பேச்சு
அதன் பின்னர் மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதனுடன் நீண்ட நேரம் சுமந்திரன் உரையாடினார்.
அதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தியுடன் மேலதிக சிகிச்சை தொடர்பாகவும் சுமந்திரன் பேசினார்.