பலூனால் பறி போன சிறுவனின் உயிர்

காலி – நெலுவ பகுதியில் பலூன் துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியதால் 11 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெற்றோர் வீட்டில் இருந்தபோது, ​​குறித்த சிறுவன் பலூனை வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது பலூன் வெடித்து அதில் ஒரு துண்டு சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சிறுவன் நெலுவ – மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.