கொழும்பு (Colombo) – பொரளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இயங்கக்கூடிய தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொரளை காவல் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஓவல் மைதானத்திற்கு அருகில் வைத்து நேற்று (22) இரவு குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 07, T-56 ரக தோட்டாக்கள் மற்றும் 01 LMG தோட்டாவினையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொரளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கோமரன்கடவல காவல் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோமரன்கடவல கஜுவத்த பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.