யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி 8 பசு மாடுகளை மிகவும் சித்திரவதை செய்து எடுத்துச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிசார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இருந்து வவுனியா பகுதிக்கு இந்த பசு மாடுகள் ஏற்றி சென்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். கொடிகாமம் நகரப் பகுதியில் வைத்து சந்தேகத்துக்கு இடமான வாகனம் சோதனை இடப்பட்டது.
இதன்போது பசு மாடுகள் மிகவும் முன்னங்கால்களும் பின்னங்கால்களும் கட்டப்பட்ட நிலையில் சித்திரவதை செய்துஎடுத்து சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.