இலங்கையின் பிரபல ராப் பாடகரான இராஜ் வீரரத்ன, குற்றப் புலனாய்வுத் துறையினரால் அனுப்பப்பட்ட அழைப்பாணையைத் தொடர்ந்து, வாக்குமூலம் அளிக்க இன்று (26) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார்.
நேற்று (25) குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுதத்த திலகசிறி தொடர்பில் தனது யூடியூப் ஊடாக வெளிப்படுத்திய தகவல் தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே தன்னை அழைத்ததாகக் அவர் கூறியுள்ளார்.
மேலும், தலதா மாளிகைக்கு பணம் வழங்குவதாக மோசடியான கோரிக்கை தொடர்பில் தாம் தெரிவித்துள்ளதாகத் குறிப்பிட்ட இராஜ் வீரரத்ன, குறித்த காணொளியை உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான இலங்கையர்கள் பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.