இலங்கை (Sri Lanka) நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மயிலிட்டி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.