மேற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு குறித்த தகவல்களை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் வழங்கியுள்ளார்.
அதன்படி, 700 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மேற்கு கடற்கரையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், போதைப்பொருள் கரைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.