இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென் மொரினோவைச் (Carmen Moreno) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சந்துள்ளார்.இதனை தொடர்ந்து குறித்த கலந்துரையாடலில் சஜித் பிரேமதாச,
GSP+ வரிச் சலுகை பயன்பாடு தற்போதும் அமுலில் இருந்து வருவதனால், அதை நாம் முழுமையாகப் பயன்படுத்துகிறோமா என்பதுதான் கேள்வியாக அமைந்து காணப்படுகிறது.
அமெரிக்கா தீர்வை வரிப் பிரச்சினை எழும்போது, ஆபத்துக்களை நிர்வகிப்பதற்கு மட்டுமல்லாது புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை எட்டுவதற்கும், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பங்குதாரர்களையும் நாம் ஈடுபடுத்த வேண்டும்.
இலங்கை இனிமேலும் பார்த்துக் கொண்டிருக்காமல் இப்போதே செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.