கதிர்காமம் பெரிய விகாரைக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதரகம விகாரையை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (13) மாலை 6 மணி முதல் நாளை (14) காலை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டு பிறப்பின் போது பின்பற்றப்படவுள்ள மத கலாசார நிகழ்வுகளை முன்னெடுக்கும் வகையில் குறித்த விகாரை இவ்வாறு மூடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நாளை (14) மதியம் 1 மணிக்கு பூஜைகளுக்காக விகாரை மீண்டும் திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.