விஹாரகல பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பெரகல – வெல்லவாய சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இதன் விளைவாக, அந்த சாலையில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாற்றுப் பாதையாக எல்ல-வெல்லவாய சாலையைப் பயன்படுத்தலாம் என்றும் பதுளை மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (19) அதிகாலையில் நடந்ததாகவும், மண்சரிவு காரணமாக சாலை முற்றிலுமாக தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைபட்ட சாலையில் உள்ள மண்ணை அகற்ற சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.