தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது. வசி என்பவரை காதலித்து கரம்பிடித்தார் பிரியங்கா.
இந்த நிலையில், பிரியங்காவின் திருமணத்தை தொடர்ந்து பாவனி – அமீர் திருமணமும் கோலாகலமாக இன்று நடைபெற்று முடிந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சந்தித்து கொண்ட பாவனி – அமீர் காதலில் விழுந்தனர். இதன்பின் தங்களது காதலை அறிவித்தாலும், திருமணம் எப்போது என அறிவிக்கவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் வருகிற ஏப்ரல் 20ம் தேதி தங்களது திருமணம் நடக்கவுள்ளது என இருவரும் தெரிவித்திருந்த நிலையில், இன்று பாவனி – அமீர் திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. பாவனி – அமீர் திருமண புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..