ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கை!

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கடந்த ஒரு மாதத்தில் 19,500 ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக வசிக்கும் சுமார் 80,000 ஆப்கானியர்கள் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இருப்பினும், ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் ஆட்சி இது தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.