‘பன்னி மூஞ்சி வாயன்’ என்ற பெயரால் புகழ் பெற்றவர் யோகி பாபு. தனித்துவமான உடல் மொழி, பேச்சு மொழியால் கோலிவுட் சினிமா காமெடியன் லிஸ்ட்டில் தடம் பதிக்க ஆரம்பித்தார்.
இவரை திரையில் மட்டுமே பார்க்கும் பலருக்கும் இவர் வெறும் காமெடியன் என்று தான் தெரியும். ஆனால், இவரை பற்றிய பல உண்மைகள், உங்கள ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
இவரது பெயர் மாற்றத்தில் இருந்து தொழில் மாற்றம் வரை மறைந்திருக்கும் பின்னணி உண்மைகள்…
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி லொள்ளு சபா தான் யோகி பாபுவுக்கு அறிமுகம் கொடுத்தது.
இயக்குனர் ராம் பாலா தான் இவரை கண்டெடுத்தார்.
யோகி பாபுவின் தனித்துவமான தோற்றம் கண்டு தான் ராம் பாலா இவரை தேர்வு செய்தார். இவரை நடிகராக / ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிக்க தான் அழைத்தார் ராம் பாலா.
யோகி பாபு ராம் பாலாவிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்ற துவங்கினார். ஏறத்தாழ இரண்டு வருடங்கள் இவர் ஸ்க்ரிப்ட் எழுத உதவியாக இருந்தார்.
அமீரின் ‘யோகி’ படம் தான் வெள்ளித்திரையில் யோகி பாபுவுக்கு அறிமுகம். இந்த படத்தின் பெயர் தான் இவர் பெயரின் முன்னாடி விசிட்டிங் கார்ட் போல ஒட்டிக் கொண்டது.
சமீப காலமாக யோகி பாபு மாநில அளவில் கால்பந்தாட்ட வீரராக விளையாடியவர் என்ற செய்தியும் பரவலாக பரவி வருகிறது. ஆரம்பத்தில் காமெடியனாக மட்டும் ஜொலித்த யோகி பாபு.
ஆண்டவன் கட்டளையில் தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் எனவும் நிரூபித்தார்.